Thursday, September 30, 2004

ரஜினியின் "சந்திரமுகி" ரகசியம்!

ரஜினியின் "சந்திரமுகி" ரகசியம்!

சிவாஜி ஃபிலிம்ஸில் ரஜினி நடிக்கிறார் என்றதுமே ரசிகர்களிடம் மட்டுமின்றி திரையுலகிலும் பரபரப்பு தொற்றிக் கொண்டுவிட்டது.

சிவாஜி ஃபிலிம்ஸ் சார்பில் நடிகர் பிரபு தயாரிக்க, திரைக்கதை, வசனம் எழுதி பி. வாசு இயக்க, ரஜினி நடிக்கும் அந்தப் படத்துக்குப் பெயர் "சந்திரமுகி".

"சந்திரமுகி" யைப் பற்றிப் பார்ப்பதற்கு முன் ஜக்குபாய் கதி என்னாச்சு என்று பார்க்கலாமா?

பாமக தலைவர் ராமதாசுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பாமகவைத் தோற்கடிக்க தனது ரசிகர்கள் ஒரு உத்வேகத்தோடு செயல்பட வேண்டும் என்பதற்காக அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்கப்பட்ட அறிவிப்புதான் ஜக்குபாய்.

கதை என்கிற ஒன்றை தயார் செய்யாமலே ஜக்குபாய் வளர முடியாமல் போனது. டைரக்டர் கே.எஸ். ரவிக்குமாருக்கு சம்பள அட்வான்சாக இருபது லட்ச ரூபாய் தந்திருக்கிறார் ரஜினி.

தொடர்ந்து கதை விவாதம் நடந்து கொண்டிருந்தாலும், திருப்தி இல்லாமலே இருக்கிறது. இதற்கிடையே டைரக்டர் தரணியை கூப்பிட்டு ரஜினி கதை கேட்டதும், ஜக்குவில் கமிட் ஆகிவிட்டதால் கமலின் படத்தை (வசூல்ராஜா) இயக்க முடியாமல் போனதும் ரவிக்குமாருக்கு டென்ஷனையே உண்டு பண்ணியது.

இந்த நிலையில் ரவிக்குமாரை கூப்பிட்டுப்பேசிய ரஜினி... நான் பி. வாசு டைரக்ஷனில் ஒரு படம் பண்ணப் போகிறேன். அதற்குள் நல்ல கதையை ரெடி பண்ணிவிடுங்கள். சந்திரமுகி வெளியாகும் ஏப்ரல் 14ல் உங்களுடைய காம்பினேஷனில் ஒரு படத்திற்கான அறிவிப்பை வெளியிடுவோம். ஜக்குபாய் பெயரை விட்டுவிட்டுவேறு பெயரில் அந்தப் படத்தைப் பண்ணலாம் எனச் சொல்லிவிட்டார் ரஜினி.

ஆக... ஜக்குபாய் கைவிடப்பட்டாலும் ரஜினி - கே.எஸ். ரவிக்குமார் கூட்டணியில் ஒரு படம் வருவது நிச்சயம்!

இனி சந்திரமுகி உருவான கதையை பார்ப்போமா?

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டாக ஓடிய மணிச்சித்ரதாழ் மோகன்லால் - சுரேஷ்கோபி - ஷோபனா நடித்த படம் அது! இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஷோபனாவிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

காதல் கிசுகிசு படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோதே "மணிச்சித்ரதாழ்" படத்தின் கதையை வலதுகை, ஆறாவது விரல், புண்ணியவான் என சில தலைப்புகளில் தேர்வு செய்து விஜயகாந்திடம் சொன்னார் பி.வாசு. ஏற்கனவே நூறாவது நாள், ஊமை விழிகள் உட்பட துப்பறியும் படங்களில் விஜயகாந்த் சிறப்பாக நடித்திருந்ததால் அதே மாதிரியான துப்பறியும் அம்சம் கொண்ட இந்தக் கதையை விஜயகாந்திடம் சொன்னார் வாசு.

ஆனால் இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக இருக்கிறது என்று தவிர்த்துவிட்டார் விஜயகாந்த்! அதன்பிறகு ஆப்தமித்ரா என்ற பெயரில் இந்தக் கதையை கன்னடத்தில் பண்ணினார் பி. வாசு.

விஷ்ணுவர்த்தன் - ரமேஷ்அரவிந்த் - சௌந்தர்யா நடித்தனர். இதுதான் சௌந்தர்யா நடித்த கடைசிப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வருகிறது.

சமீபத்தில் பெங்களூரில் தங்யிருந்த ரஜினி இந்தப் படத்தைப் பார்த்தார். அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.

பல வருங்களாகவே சொந்தப் படம் எடுத்து வரும் ரஜினி இப்போது சிவாஜி ஃபிலிம்சிற்காக நடிக்க ஒப்புக் கொண்டது எப்படி?

சிவாஜி ஃபிலிம்ஸ் சார்பில் பிரபு தயாரிக்க ரஜினி - பி. வாசு கூட்டணியில் வந்த "மன்னன்" படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. வெறும் நடிகராக மட்டுமே இருந்த ரஜினி மன்னன் படத்தின் சம்பளத்திற்கு வட, தென் ஆற்காடு செங்கல்பட்டு, காஞ்சிபுரம் அடங்கிய என்.எஸ்.சி. ஏரியா விநியோக உரிமையை வாங்கிக் கொண்டு விநியோகஸ்தராகவும் ஆனார் என்று குறிப்பிடத்தக்கது.

"படையப்பா" படத்தின்போது யார் யாரோ கோடி சம்பளம் வாங்குறாங்க. நடிகர்களுக்கே திலகம் நீங்க. இந்தாங்க ஒரு கோடி ரூபாய் என சிவாஜிக்கு சம்பளம் கொடுத்தார் ரஜினி. இதில் நெகிழ்ந்து போன சிவாஜி மன்னன் மாதிரி இன்னொரு படம் எங்க பேனருக்கு பண்ணிக் கொடுப்பா என ரஜினியிடம் சொல்லியிருந்தார். சமயம் வரும்போது நிச்சயம் பண்ணுவேன் என ரஜினியும் சொல்லியிருந்தார்.

சிவாஜி மறைவுக்குப் பின் அவரின் முதலாமாண்டு நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ள அன்னை இல்லம் போயிருந்தார் ரஜினி. அப்போது 2004ல் சிவாஜி ஃபிலிம்ஸின் பொன்விழா எனச் சொல்லிய சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் எங்களுக்கு ஒருபடம் பண்ணித்தரணும் என கேட்டுக் கொண்டார்.

சிரித்தபடியே போய்விட்டார் ரஜினி. அந்த சிரிப்புக்கு அர்த்தம் இப்போது தெரிந்திருக்கிறது.

குருவாயூர் கோவிலில் குடும்பத்தோடு சாமி கும்பிடப் போயிருந்த பி. வாசுவின் செல்போன் ஒலிக்கிறது. எடுத்துப் பேசினால் எதிர்முனையில் ராம்குமார்.

"ஆப்தமித்ரா" படம் ரஜினி சாருக்கு பிடித்துவிட்டது. சிவாஜி ஃபிலிம்ஸ் பேனரிலேயே தயாரிக்க ஒப்புக் கொண்டுவிட்டார். உடனே கிளம்பிவாங்க.

சந்தோஷத்தில் பறந்து வந்தார் பி. வாசு. ரஜினியை சந்தித்தார். மளமளவென வேலைகள் ஆரம்பமாகியது.

ரஜினியும், பிரபுவும் குருசிஷ்யன், தர்மத்தின் தலைவன் படங்களில் சேர்ந்து நடித்து கலக்கியிருக்கிறார்கள். "சந்திரமுகி" படம் மூலம் மீண்டும் கலக்கப்போகிறார்கள்.

Courtesy : Webulagam.com
http://www.webulagam.com/cinema/cinenews/0409/29/1040929006_1.htm

The making of a Rajnikant-starrer

RAJNIKANT WILL star in a Sivaji productions film, conceived as a golden jubilee special from a prestigious production house, which is credited with some of the most memorable Tamil movies.

The chain of events that led to the finalisation of plans by itself is a fascinating story. Scene 1: Last year, when Sivaji Ganesan's grandson Dhushyanth took to acting profession, he was taken to Rajnikant, who wished him all the best. That time Sivaji's son Ram Kumar told the superstar about his intention to commemorate their 50th year with pomp and show. Rajnikant wanted them to produce a good blockbuster movie.

Scene 2: Bangalore, where Rajnikant stays these days. The star is impressed with the Kannada film Aptha Mithra. It was actress Soundarya's last film and it was a box office hit. The film crossed the collection of Yajamana to become the biggest hit of the year. The film, with Vishnuvardhan in the lead, was directed by P.Vasu.

Scene 3: Chennai. Rajnikant calls up director P.Vasu to congratulate him on his wonderful film and appreciates his novel approach to the screenplay. Vasu says he has a new story to narrate. Rajnikanth listens to the story in detail.

Scene 4: Guruvayoor. Vasu is there with his family to offer worship at a temple. As they return from the temple, his mobile phone rings. Sivaji's son Ramkumar is on the line. "Rajnikant is happy about the story which you have told him and he has asked me to produce the film under the banner of Sivaji productions and you are going to direct the film."

Scene 5: Chennai. Sivaji productions becomes busy. A film, starring Rajnikant, is a goldmine for any producer. Ram Kumar is also happy that in their 50th year they are going to release a prestigious film named Chandra Mukhi with Rajnikant and Prabhu in the lead. The film is to be produced by Prabhu as he is a lucky mascot for the Sivaji productions. Prabhu's name first appeared as the producer in the film Mannan in which Rajnikant was the hero. The second film Rajakumaran, also produced by Prabhu was his 100th as an actor. A television serial produced by Prabhu was a hit too. Chandra Mukhi will be his third venture.


Scene 6: The other cast and credits of the film are Vijayakumar, Nasser and Vadivelu and the camera is to be handled by Sekhar Joseph of Okkadu (Telugu version of Gilli). Art is by Thotta Tharani and music by Vidyasagar. But the million-dollar question is who will be the heroine of the movie. Names doing the rounds include those of popular Hindi actresses and stars from the South.

The full cast and credits will be announced on October 1, the birthday of Sivaji Ganesan. The shooting of Chandra Mukhi is scheduled to start on November 1 and due for release on April 14, 2005.

Courtesy : The Hindu
http://www.hindu.com/lf/2004/09/27/stories/2004092702160200.htm

கைகொடுத்த ரஜினி... குஷியான சிவாஜி குடும்பம்...

தமிழ்த் திரையுலகமே பேரணியாகத் திரண்டு கோட்டையில் முதல்வரை சந்திக்கச் சென்று, முதல்வருக்காக காத்திருந்த நேரத்தில், சினிமா பிரமுகர்கள் பலரும் நடிகர் பிரபுவுக்கும் டைரக்டர் பி.வாசுவுக்கும் கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்தனர். அதன் அர்த்தம் அடுத்த சில நாட்களிலேயே வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. பி.வாசுவின் இயக்கத்தில் பிரபுவின் தயாரிப்பில் ‘சந்திரமுகி’ என்ற படத்தில் ரஜினி ஹீரோவாகிறார் என்ற ஸ்வீட் நியூஸ்தான் அது.
சிவாஜி ராம்குமார் பிரபு

Ôஇனி வெளிப்படங்களில் நடிப்பதில்லை. சொந்தத் தயாரிப்புதான்’ என்று கடந்த சில வருடங்களாக கொள்கை வைத்திருந்த ரஜினி, அந்த முடிவை மாற்றிக்கொண்டதன் பின்னணி என்ன? ÔÔரஜினிக்கும் மறைந்த சிவாஜிக்கும் இடையிலான உருக்கமான நன்றிக்கடன்தான் அதுÕÕ என்கிறார்கள் சிலர்.

சிவாஜி குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமான இவர்களிடம் பேசியபோது, Ôசந்திரமுகிÕ அவதரித்த ஸ்டோரியை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

ÔÔஇப்போது சிவாஜியின் குடும்பம் சொல்லிக்கொள்கிற மாதிரியான பொருளாதார வலுவுடன் இல்லை. அவர்களுக்குச் சொந்தமாக இருந்த தியேட்டர்கள், இன்னும் பிற சொத்துக்கள் எல்லாம் கடந்த சில வருடங்களில் கைமாறியிருக்கின்றன. சென்னை போக் ரோட்டில் இருக்கும் சிவாஜியின் புகழ்பெற்ற Ôஅன்னை இல்லம்Õ பங்களாவும் விற்பனைக்கு வருவதாக செய்திகள் கிளம்பிவிட, சிவாஜி குடும்பத்தினர் மிகக் கடுமையாக எல்லாவற்றையும் மறுத்துவிட்டனர்.

என்றாலும், தொடர்ந்து கசிந்த செய்திகளை ரஜினி கவலையோடு கவனித்துக் கொண்டிருந்தார். சிவாஜி குடும்பத்தினரின் தற்போதைய முக்கிய வருவாய் கேந்திரமான ‘சிவாஜி புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பு நிறுவனமும் பெரிய வளர்ச்சி எதுவும் இல்லாமல் இருப்பதைப் புரிந்துகொண்டார். டி.வி. சீரியல் எடுத்தாவது இக்கட்டை ஈடுகட்டும் பணியில் சிவாஜி குடும்பத்தினர் இறங்கவும், Ôஅவர்களுக்கு உதவ வேண்டியது ஒவ்வொரு நடிகனின் கடமைÕ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆதங்கப்பட்டிருக்கிறார் ரஜினி. இந்த நிலையில், ‘சிவாஜி புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தின் ஐம்பதாவது படத்தை பிரபுவை வைத்தோ சிவாஜியின் பேரனும் ராம்குமாரின் (சிவாஜியின் மூத்த மகன்) புதல்வருமான Ôஜூனியர் சிவாஜிÕயை வைத்தோ தயாரிக்க முடிவு செய்தார்கள். இதைக் கேள்விப்பட்டதும் ரஜினி நிமிர்ந்தார். சிவாஜி புரொடக்ஷன்ஸில் தான் நடித்து பெரும் வெற்றிப் படமாக அமைந்த ‘மன்னன்’ படத்தின் வெற்றிவிழாவில் சிவாஜிக்கும் தனக்கும் நடந்த ஒரு உரையாடல் ரஜினியின் நினைவில் நிழலாடியிருக்கிறது. ‘இதே தயாரிப்பு நிறுவனத்தின் ஐம்பதாவது படத்திலும் நான் நடிப்பேன்Õ என்று உணர்ச்சிகரமாக அப்போது சிவாஜிக்கு வாக்குறுதி அளித்திருந்தார் ரஜினி.
பி.வாசு

ரஜினியின் ஆரம்பகட்ட வளர்ச்சி நாட்களில், அவரது சொந்த வாழ்க்கையில் சில சங்கடங்கள் வந்தபோது ஒரு தந்தையைப் போன்ற உரிமையுடன் அவருக்கு ஆறுதலும் வழிநடத்தலும் தந்தவர் சிவாஜி. அந்த வகையில் அவருக்கு தான் ரொம்பவே நன்றிக்கடன் பட்டிருப்பதாக நெருக்க மானவர்களிடம் அடிக்கடி சொல்வார் ரஜினி. சிவாஜிக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவும், அவருக்குப் பட்ட நன்றிக்கடனை அடைக்கவும் தானாகவே முன்வந்து இந்த ஐம்பதாவது படத்தில் நடித்துக் கொடுக்கச் சம்மதித் திருக்கிறார்ÕÕ என்று சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இதையே இன்னொரு தரப்பினர், ÔÔரஜினி ஒரு படத்தில் நடித்துக் கொடுத்தால் பிரச்னைகளிலிருந்து முற்றிலுமாக மீண்டு விடலாம் என்று சிவாஜி குடும்பத்தினர் நினைத்தனர். ஆனால், வெளி படங்களில் அவர் நடிப்பாரா என்ற தயக்கம் இருந்தது. சிவாஜியின் துணைவியார் கமலா அம்மாள் ரஜினிக்கு போன் செய்து இதுபற்றிக் கேட்க, ரஜினி மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக்கொண்டார்ÕÕ என்கிறார்கள் இவர்கள்.

Ôமன்னன்Õ படத்தை இயக்கிய பி.வாசுவின் Ôசந்திரமுகிÕயில் நடிப்பது என்று ரஜினி தீர்மானித்தது பற்றி கோடம்பாக்க வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம்.

‘‘ரஜினி பெங்களூர் போயிருந்த சமயம் கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தன், தான் நடித்த ‘ஆப்த மித்ரா’ என்ற படத்தைப் பார்க்க அழைத்தார். அதை இயக்கியவர் பி.வாசு. மலையாளத்தில் ‘மணிச்சித்திர தாழ்’ என்ற பெயரில் பத்தாண்டுகளுக்கு முன் வெளியான படத்தின் கன்னட பதிப்புதான் ‘ஆப்த மித்ரா’. அந்தக் கதையும் அதை இயக்கிய விதமும் ரஜினிக்குப் பிடித்திருந்தது. அதை அப்படியே மனதில் ஊறப் போட்டிருந்த ரஜினி, சிவாஜி புரொடக்ஷன்ஸில் நடிக்க முடிவெடுத்தவுடன், பி.வாசுவை அழைத்துப் பேசிவிட்டு, Ôஆப்த மித்ராÕ படத்துக்கான Ôரைட்ஸ்Õஸையும் வாங்கச் சொல்லியிருக்கிறார். Ôஜக்குபாய்Õ படத்தை இப்போதைக்கு(?) மறந்துவிட்டு, Ôஆப்த மித்ராÕ கதைக்கு தமிழில் Ôசந்திரமுகிÕ என்று தானே ஒரு பெயரும் சூட்டியிருக் கிறார்ÕÕ என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

இயக்குநர் பி.வாசுவிடம் பேசினோம். ÔÔநான் ஏற்கெனவே Ôமன்னன்Õ, Ôஉழைப்பாளிÕ ஆகிய படங்களில் ரஜினியை இயக்கி இருக்கிறேன். அந்த வகையில் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறோம். சமீபத்தில் பெங்களூரிலிருந்து என்னிடம் பேசினார் ரஜினி. Ôஉன்னோட Ôஆப்த மித்ராÕ பார்த்தேன்பா. பிரமாதம். ஆழமான சென்டிமெண்ட்டும் விறுவிறுப்பான திரைக்கதையும் இருந்தா போதும், கலக்கிடலாம்னு நிரூபிச்சிருக்கே’ என்றார். அவர் சென்னைக்கு வந்ததும் போய்ப் பார்த் தேன். Ôஇப்படி ஒரு கலகலப்பான படத்தில் நடிக்கணும்னு நினைச்சிக்கிட்டிருக்கேன். ஆனால், எல்லோரும் என்னிடம் சீரியஸான சப்ஜெக்ட்களையே சொல்றாங்கÕ என்றவரிடம், ‘நீங்களே இதைத் தமிழில் நடிச்சுக் கொடுக்கலாமேÕனு சிரிச்சுக்கிட்டே கேஷ§வலாக் கேட்டுட்டு வந்துட்டேன். அடுத்த சில நாளில் பார்த்தா, பிரபுவோட போன்! Ôஎங்க கம்பெனியோட ஐம்பதாவது படத்துல ரஜினி சார் நடிக்க சம்மதிச்சிருக்கார். நீங்கதான் டைரக்டர்Õனு சொன்னார். எதிர்பாராத இன்ப அதிர்ச்சிÕÕ என்ற பி.வாசுவிடம், ‘தமிழுக்காக, ரஜினியின் இமேஜுக்காக கதையை நகாசு பண்ணுவீர்களா?’ என்று கேட்டோம்.

ÔÔபடத்துல கண்டிப்பா அரசியல் இல்லை. இது முழுக்க ஜாலியான படம். குழந்தையிலயிருந்து, குடுகுடு தாத்தா வரைக்கும் எல்லாரையும் தியேட்டருக்கு இழுக்கற கதை. ரஜினிக்குள் இருக்கற படுஜாலி மனுஷனை ரொம்ப நாள் கழிச்சு மறுபடி வெளியில கொண்டுவரப் போகிறது இந்தப் படம். அதேசமயம் ஆக்ஷனுக்கும் பஞ்சமிருக்காதுÕÕ என்று மட்டும் சொன்னார் பி.வாசு.

‘ஆப்தமித்ரா’ படத்தில் ரமேஷ் அர்விந்த் ஏற்று நடித்த கேரக்டரை தமிழில் பிரபு செய்யப் போகிறார். சௌந்தர்யாவின் (இறப்பதற்கு முன் கன்னடத்தில் அவர் நடித்த கடைசிப் படம்) கேரக்டரில் அநேகமாக சிம்ரன் நடிக்கலாம் என்கிறார்கள். சமீபத்தில் சிம்ரனுக்கு ‘குட்லக்’ ப்ரிவியூ தியேட்டரில் கன்னட படத்தைப் போட்டுக் காட்டியிருக்கிறார்கள். இவர் ரஜினிக்கான ஜோடி அல்ல என்று சஸ்பென்ஸ் வைப் பவர்கள், ரஜினியின் ஜோடியாக ஜோதிகா அல்லது சினேகா நடிக்கலாம் என்று சொல்கிறார்கள்.

அக்டோபர் ஒன்றாம் தேதி, சிவாஜி பிறந்தநாள். அன்று அவருடைய வீட்டில் Ôசந்திரமுகிÕ பட பூஜை! மறுபடி ரஜினி படம் என்ற ஒரேயரு அறிவிப்பி லேயே பல வணிக விசாரணைகள் ஆரம்பமாகிவிட, உற்சாகமாக இருக்கிறது சிவாஜி குடும்பம்.

ரஜினி டிராக் மாறிப் போய்விட்டதால் ‘ஜக்குபாய்’ படத்தின் கதி என்னாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ÔÔஇதை கே.எஸ். ரவிக்குமார் இயக்குவார் என்று அறிவிப்புகள் வந்தன. அவர் படங்களை இயக்காமல் ஓய்வாக இருந்து நாங்கள் பார்த்ததில்லை. எப்போதுமே தன்னை பிஸியாக வைத்துக்கொள்வார் ரவிக்குமார். ஆனால் ரஜினிக்கு படம் எடுக்கப் போகிற ஆர்வத்தில் இடையில் வந்த பல வாய்ப்புகளை ஒதுக்கிவிட்டு, சதாநேரமும் Ôஜக்குபாய்Õ பற்றிய சிந்தனையிலேயே இருந்தார். ரஜினியுடன் பல நாட்கள் கதை விவாதத்திலேயே கழித்தார். Ôஜக்குபாய்Õ படத்தின் கதை என்ன என்று ஆளாளுக்குப் பல ஊகங்களை வெளியிட்டபோதெல்லாம், மறுப்பும் விளக்கமும் கொடுத்துக் கொண்டிருந்தார்.

தீவிர கதை விவாதத்துக்குப் பிறகு கே.எஸ்.ரவிக்குமார் ஸ்கிரிப்ட்டைத் தயார் செய்து கொடுத்தார். ரஜினியோ, Ôஇன்னும் ஃபோர்ஸா இருக்கணும், ரவிÕ என்று மேலும் மேலும் திருத்தங்கள் சொல்லிக்கொண்டே இருந்தார். இப்போது ரவிக்குமார் Ôசந்திரமுகிÕ அறிவிப்பு பற்றி என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லைÕÕ என்று அவரது நண்பர்கள் சொல்ல, நாம் ரவிக்குமாரிடமே பேசினோம்.

‘‘ரஜினியின் புதுப்பட அறிவிப்பை செய்தித் தாள்களில்தான் நானும் பார்த்தேன். மற்றபடி, Ôஜக்குபாய்Õ படம் பற்றி எதையும் ரஜினி சொல்லவில்லை. இப்போதும் Ôஜக்குபாய்Õ பட விவாதத்தில் என் உதவியாளர்களுடன் பிஸியாக இருக்கிறேன். அடுத்த சில நாட்களில் அதுபற்றி இன்னும் தெளிவு பிறக்கும்’’ என்று முடித்துக் கொண்டார் கே.எஸ்.ரவிக்குமார்.

சமீபத்தில் மதுரை விழா ஒன்றில் கலந்துகொண்ட சிம்ரன், தான் ரஜினி படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, Ôதிருமணத்துக்குப் பிறகு நடிப்புக்கு சிறு இடைவெளி விட்ட சிம்ரன் மறுபடி நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார்Õ என்று செய்திகள் வந்தன. கூடவே, Ôஅவர் இப்போது கர்ப்பமாக இருக்கிறார். உடனடியாக படம் எதிலும் நடிப்பது சாத்தியமில்லைÕ என்றும் ஒரு செய்தி பரவி, ரசிகர்களைக் குழப்பியது.

இதுபற்றி நாம் விசாரித்தபோது, Ôஒரு குளிர்பான நிறுவனத்துடன் ஐந்து வருடங்களுக்கு சிம்ரன் காண்ட்ராக்ட் போட்டிருக்கிறார். அதன் அடிப்படையில் சிம்ரன் தொடர்ந்து விளம்பரப் படங்கள் நடித்துக்கொடுக்க வேண்டும். இடையே கர்ப்பம் ஆகக்கூடாது என்பதும் அந்த காண்ட்ராக்ட்டின் ஒரு ஷரத்து. எனவே, சிம்ரன் கருவுற்றிருக்கிறார் என்று வரும் செய்திகள் சரியாக இருக்க முடியாதுÕÕ என்கிறார்கள் சிம்ரன் வட்டாரத்தில்.

Courtesy : Junior Vikatan
http://www.vikatan.com/jv/2004/oct/03102004/jv0601.htm

கமல் தலைமையில் ரஜினி பட விழா!

ரஜினியின் புதிய படத் தொடக்க விழா, கமல் தலைமையில் நடைபெற உள்ளது.

பல்வேறு விழாக்களில் ரஜினி, கமல் சேர்ந்து பங்கேற்பதுண்டு. ஒருவரின் பட விழாவின்போது மற்றொருவர் கலந்து கொள்வதும் உண்டு. கடைசியாக "ஹேராம்' பட விழாவுக்கு ரஜினி வந்திருந்தார்.

ஆனால் அந்த விழாவில் திமுக தலைவர் கருணாநிதிதான் தலைமை. ரஜினியின் படத் தொடக்க விழாவுக்கு கமல் தலைமை தாங்குவது கோலிவுட் வட்டாரத்தில் மகிழ்ச்சியையும் அதே சமயம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காரணம், இருவரும் பெரிய நடிகர்கள். ஒருவர் விழாவுக்கு இன்னொருவரை தலைமை ஏற்க அழைக்கும்போது ரசிகர்களிடையே சலசலப்பு, ஈகோ பிரச்சினை ஏற்படலாம் என்றுதான் இந்த நடிகர்களின் தரப்பிலிருந்து கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்போது கமல் தலைமையில் விழா நடக்க உள்ளது.

இதற்கு கமல் ஒத்துக் கொள்ள காரணம், சிவாஜிதான். ரஜினி நடிக்கும் "சந்திரமுகி', சிவாஜி புரொடக்ஷன்ஸ் படம். இதன் தொடக்க விழா அக்.1-ல் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

சிவாஜியை தந்தையாக மதிக்கும், அவரது குடும்பத்தை தனது குடும்பமாக நினைக்கும் கமல்தான் இவ்விழாவுக்கு தலைமை தாங்க வேண்டும் என்பது பிரபுவின் அவா. பிரபுவின் இந்த முடிவுக்கு சூப்பர் ஸ்டாரும் பச்சைக் கொடி காட்டியுள்ளார்.

"அக். 1-ம் தேதி அப்பாவின் பிறந்த நாளும் வருவதால் நீங்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்' என பிரபு கூற, மறுப்பேதும் கூறாமல் "ஓகே' சொல்லியிருக்கிறார் கமல்.

அன்று (அக்.1) மாலை சிவாஜி குடும்பத்தினர், சென்னை மியூசிக் அகாதெமியில் சிவாஜி பிறந்த நாள் விழாவையும் பிரமாண்டமாக நடத்துகின்றனர். அதிலும் கமல் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மத்திய அமைச்சர் சுனீல் தத் தலைமையேற்கிறார்.

"சந்திரமுகி படத்துக்கான நாயகி தேர்வு நடந்த பின் தொடக்க விழா நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. விழா தள்ளிப் போடப்பட்டாலும் அதில் கமல் தலைமை தாங்குவார்' என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.

Coutesy : Dinamani